From George Amir 10th January 2020

கண்களில் நீர் வந்து நிரவுகிறது உணர்வுகளில் சோகம் தொடர்கிறது யாழ் நகர் தந்த இசை மைந்தன் நிஹால் மேல் உலகில் இசை மீட்ட சென்று விட்டான் பொப்பிசையும் , பண்ணிசையும் தப்பாது தந்த ஒப்பற்ற மாதவன் - காலன் தப்பி அழைத்தபோது , கடவுளிடம் சென்றுவிட்டான் வாழ்ந்த காலத்திலும் , வாழ்வு முடித்த காலத்திலும் - என்றும் வாழ்ந்திருக்கும் உனது இசையின் சுரங்களும் குரலின் அதிர்வுகளும் ... யாழ் ஆசனக் கோவில் முதல் இலங்கை வானொலிவரை ஒய்யாரமாகப் பறந்த நின் புகழ் எங்கள் நினைவிலும் நிசத்திலும் என்றும் நிலைத்திருக்கும் அன்புக் கலைஞனே உன் ஆத்மா இறைவன் மலரடியில் சாந்தி அடையட்டும் இறையோடு உன் இசை நிறைவாகட்டும்.... கண்ணீருடன் ரவி அமிர்தன்